திருப்பத்துார்: ஆம்பூர் அருகே, மனைவியை அடித்த போது தடுத்ததால் மாமியாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்ன வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 60. விவசாயி. அவர் மனைவி ேஹமாவதி, 57. இவர்களது மகள் உஷா, 30. இவரது கணவர் பிரேம்குமார், 35. கட்டட தொழிலாளி. இவர்களும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.உஷாவிற்கும், பிரேம்குமாருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. வழக்கம் போல கடந்த 4 ம் தேதி தகராறு ஏற்பட்டது. கோவித்துக்கொண்ட உஷா அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.இந்நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு அங்கு வந்த பிரேம்குமார் மனைவியை தன்னுடன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் உஷா செல்ல மறுத்து விட்டார். ஆத்திரமடைந்த பிரேம்குமார் மனைவி உஷாவை அடித்தார்.மீண்டும் அடித்த போது அங்கிருந்த அவரது தாய் ேஹமாவதி தடுத்தார். ஆத்திரமடைந்த பிரேம்குமார் மாமியாரை கட்டையால் தாக்கினார்.படுகாயமடைந்த ேஹமாவதி வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு இன்று காலை 11:00 மணிக்கு அவர் இறந்தார். ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேலும் வேலூர் கோட்டம் செய்திகள் :
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more
I agree
X