பயனாளிகள் தேர்வில் முறைகேடு கூடாது : அமைச்சர் மூர்த்தி பேச்சு | மதுரை செய்திகள் | Dinamalar
பயனாளிகள் தேர்வில் முறைகேடு கூடாது : அமைச்சர் மூர்த்தி பேச்சு
Added : டிச 08, 2022 | |
Advertisement
 



மேலுார் : மேலூரில் கலைத்திருவிழா, பூமி பூஜை மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் உள்ளிட்ட திட்டங்களை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தனர்.



மேலுார் ஒன்றியத்தில் ரூ3.45 கோடியில் புதிய அலுவலகத்திற்கான பூமி பூஜை, கருத்தபுளியம்பட்டி, தெற்குத்தெரு பகுதிகளில் வீடு இல்லாதோருக்கு வீடுகள் வழங்கி அமைச்சர் மூர்த்தி பேசினார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் பங்கேற்றனர்.

அமைச்சர் பேசியதாவது:
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜனவரியில் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் மதுரை மாவட்டம் முதல் பரிசை பெற வேண்டும். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வில் முறைகேடு இருக்க கூடாது, என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X