சர்ச்சைக்குரிய போஸ்டரை அச்சடித்தவர் கைது | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
சர்ச்சைக்குரிய போஸ்டரை அச்சடித்தவர் கைது
Added : டிச 08, 2022 | |
Advertisement
 



தஞ்சாவூர் : கும்பகோணத்தில், சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படத்துடன் போஸ்டர் அச்சடித்த அச்சக உரிமையாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்றுமுன்தினம் அம்பேத்கர் நினைவு நாளை யொட்டி, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் படத்துடன், சட்டமேதை அம்பேத்கர் நெற்றியில் திருநீறு பூசியும், காவி உடை அணிந்தும் இருப்பது போல போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அந்த போஸ்டர்களை அகற்றினர். போஸ்டரை அச்சடித்து ஒட்டிய ஹிந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

போஸ்டரை அச்சடித்த, கும்பகோணம் உப்புக்காரத்தெருவில் அச்சகம் நடத்தி வரும், அண்ணலக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X