கோவை: சிறைக்கைதிகளை நேரலையில் கண்காணிப்பதற்காக காவலர்களின் சட்டையில் கேமரா அணியும் திட்டம், தமிழகத்தில் 10 சிறைகளில் அமல் செய்யப்பட்டுள்ளது.
சிறைகளில் உயர் பாதுகாப்பு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பது உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. சிறைகளில் நடக்கும் விதிமீறல்கள், கைதிகளின் அத்துமீறிய செயல்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தமிழக சிறைத்துறை சார்பில் காவலர்கள் உடையில் அணியும் வகையிலான, 50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
நேற்று சென்னை புழல் மத்திய சிறை காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து மத்திய சிறைகளிலும் காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதற்கு செல்லும் காவலர்கள், இந்த கேமராக்களை அணிந்திருப்பர்.
இந்த கேமராக்களில் படம் பிடிக்கப்படும் வீடியோ காட்சிகளை, சிறையின் தலைமையகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
24 மணி நேரமும் வெப்ஸைட்டில் பப்ளிக்காக லைவ் ரிலே செய்யணும். ஒரு ஊழலும் நடக்காது. கைதி ஜெயிலர் இரண்டு தரப்பும் வரி கட்டும் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
Has to fix cameras at jail entrances, visitors screening places, jail superiors rooms, kitchens, jail offices,to elimate corruption in jails. All these plaaces need monitoring constantly from I G, Jail office.
50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன, அப்படினா ஒரு கேமரா 92,000/- ரூபாய். இதே கேமரா பிலிப்கார்ட், அமேசான் 8,000/- ரூபாய்க்கு வாங்கலாம், ஆக 38,000/ விடியலுக்கு, கரூர் கம்பெனிக்கு வரவு.. மக்களுக்கு நாமம் .
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.