சிறை காவலர்களின் சீருடையில் 'கேமரா': கைதிகளை கண்காணிக்க புது திட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சிறை காவலர்களின் சீருடையில் 'கேமரா': கைதிகளை கண்காணிக்க புது திட்டம்
Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
 

கோவை: சிறைக்கைதிகளை நேரலையில் கண்காணிப்பதற்காக காவலர்களின் சட்டையில் கேமரா அணியும் திட்டம், தமிழகத்தில் 10 சிறைகளில் அமல் செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் உயர் பாதுகாப்பு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பது உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. சிறைகளில் நடக்கும் விதிமீறல்கள், கைதிகளின் அத்துமீறிய செயல்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.



latest tamil news



இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தமிழக சிறைத்துறை சார்பில் காவலர்கள் உடையில் அணியும் வகையிலான, 50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

நேற்று சென்னை புழல் மத்திய சிறை காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து மத்திய சிறைகளிலும் காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதற்கு செல்லும் காவலர்கள், இந்த கேமராக்களை அணிந்திருப்பர்.

இந்த கேமராக்களில் படம் பிடிக்கப்படும் வீடியோ காட்சிகளை, சிறையின் தலைமையகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X