நாகையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை | நாகப்பட்டினம் செய்திகள் | Dinamalar
நாகையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை
Added : டிச 09, 2022 | |
Advertisement
 
Latest district News



நாகப்பட்டினம் : நாகையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.



நாகை, தர்மகோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவபாண்டி, 34; ரவுடி. இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று பகல் 12.00 மணிக்கு நண்பர்கள் இருவருடன், மக்கள் நெருக்கடி மிகுந்த அபிராமி அம்மன் சன்னதி அருகே டீக்கடையில் டீ குடித்துவிட்டு, பைக்கில் ஏறினார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த ஐந்து பேர், திடீரென சிவபாண்டியை சுற்றி வளைத்து பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

உடனிருந்த அவரது நண்பர்கள் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். எஸ்.பி., ஜவகர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X