தஞ்சாவூர் : தஞ்சாவூரில், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம்பெண்ணைக் கொலை செய்து, வாய்க்காலில் உடலை வீசிய தனியார் பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6ம் தேதி முதல், அவரை காணவில்லை; பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். நேற்று முன்தினம் காலை, வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவல் வந்தது.
தஞ்சாவூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அது காணமல் போன அகல்யா என்பது தெரிந்தது.
அவரின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். கடைசியாக தொடர்பு கொண்ட தஞ்சாவூர், ஞானம் நகரை நாகராஜ், 25, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாகராஜ் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
மேல உளூரில் இருந்து, தினமும் தஞ்சாவூருக்கு செல்லும் அகல்யாவுடன் கடந்த மூன்று மாதங்களாக, அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். அதற்கு அந்த நாகராஜுக்கு மறுத்து வந்தார்.
மேலும், நாகராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது, அகல்யாவுக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கடந்த 6ம் தேதி அகல்யாவை, காரில் அழைத்துச் சென்ற நாகராஜ், புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, துப்பட்டாவால் அகல்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அதே காரில், அவரது உடலை எடுத்து வந்து வாய்காலில் வீசியது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் நாகராஜை கைது செய்தனர்.