மதுரை : கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பழமையானது. இதற்கு சொந்தமாக 10.48 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அகற்றக்கோரி அறநிலையத்துறையிடம் மனு அளித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வழக்கில் 2019ல் இந்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண்களில் உள்ள சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் காலி செய்ய வேண்டும். சொத்தினை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள், முகவரி மற்றும் ஆக்கிரமிப்பின் பரப்பளவை குறிப்பிடவில்லை. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிக்கவில்லை.
அவை தங்களுக்கு சொந்தமான சொத்துக்கள். அதிலிருந்து தங்களை வெளியேற்ற மற்றும் பொது அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அனைத்துத் தரப்பினருக்கும் அரசுத் தரப்பில் முறையாக நோட்டீஸ் அளித்து விளக்கம் கோர வேண்டும். ஆட்சேபனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதை தகுதி அடிப்படையில் பரிசீலித்து, ஆக்கிரமிப்பு உறுதியாகும்பட்சத்தில் அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் 2018 லிருந்து இந்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை அரசுத்தரப்பில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.