மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தீக்குளிப்பு போராட்டத்தால் பரபரப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தீக்குளிப்பு போராட்டத்தால் பரபரப்பு
Added : டிச 10, 2022 | |
Advertisement
 

ஆத்துார்: பூச்சிக்கொல்லி மருந்து ஆலைக்கு மின்வாரிய அலுவலர்கள் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்வதை கண்டித்து தீக்குளிப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மொடக்குப்பட்டி கிராமம், பில்லங்குளத்தில் உள்ள, 6 ஏக்கரில், தனியார் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலையை திறக்கக்கூடாது;
அதன் உரிமத்தை ரத்து செய்யக்கோரி, அப்பகுதி விவசாயிகள், மக்கள், 7 மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவுப்படி ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா தலைமையில், 5 பேர் குழு அமைக்கப்பட்டது. கடந்த, 5ல், அக்குழு ஆய்வு செய்தது.

இந்நிலையில், மின்வாரிய அலுவலர்கள் நேற்று ஆலைக்கு வந்தனர். இதனால் ஆலை முன் மின்வாரிய அலுவலர்களை கண்டித்து, மக்கள், விவசாயிகள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'ஆலை சார்பில் மின் இணைப்புக்கு மனு அளித்ததால் அதற்கான பணி குறித்து ஆய்வு நடந்தது. மின் இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை' என, போலீசார் உறுதியளித்தனர். இதனால் விவசாயிகள், மக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X