தூத்துக்குடி: நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் பொன்ராஜா, நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்ற கோவில்பட்டியை சேர்ந்த பாரதிசங்கர் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தினை பதிவு ஏற்றம் செய்வதற்கு ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பாரதிசங்கர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் ஆலோசனைபடி பாரதிசங்கர் ரூ.5000 பணத்தை இளநிலை பொறியாளர் பொன்ராஜாவிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.ஹெக்டர்தர்மராஜ் தலைமையிலான போலீசார்,பொன்ராஜாவை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேலும் திருநெல்வேலி கோட்டம் செய்திகள் :
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more
I agree
X