பிளாஸ்டிக் பயன்படுத்தியோரிடம் அபராதம் வசூல் ரூ.3 கோடி! தொடர் பயன்பாட்டால் சூழல் பாதிப்பு அதிகரிப்பு
Added : ஜன 25, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News


சென்னையில் கடந்தாண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து, மாநகராட்சி 2.90 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. தொடர் நடவடிக்கை எடுத்தாலும் வணிகர்கள், பொது மக்களிடையே போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில், கடந்த 2019 ஜன., 1ம் தேதி முதல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பை போன்ற பொருட்களுக்கு, அரசு தடை விதித்தது.

கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, நாடு முழுதும் மத்திய அரசு தடை விதித்தது.

இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தவும், மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் தனி குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்தினர்.

சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு ஒரு குழு அமைத்து, தீவிர சோதனை செய்யப்படுகிறது. சோதனையில் சிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆனாலும் மாநிலத்தில், சட்ட விரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்தும் 'பிளாஸ்டிக்' பொருட்கள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து, பிளாஸ்டிக் சோதனை நடத்தப்படுகிறது. இதில், கடந்த ஆண்டில் மட்டும், 2.92 லட்சம் வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து, 1.12 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் வாயிலாக, 2.90 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்தாலும், சென்னையில் உள்ள மளிகை கடைகள், இறைச்சி கடைகள் போன்றவற்றில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு, பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாதது தான், முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தொடர்ந்து வணிக வளாகங்கள், மளிகை கடைகள் போன்றவற்றில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எத்தனை முறை அதிகாரிகள் அபராதம் விதித்தாலும், தங்களின் வணிக லாபத்திற்காக, வணிகர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.

தமிழக அரசு சார்பில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது பொதுமக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

கடும் நடவடிக்கை மற்றும் தீவிர பிரசாரம் வாயிலாக மட்டுமே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
G.Kirubakaran - Doha,கத்தார்
27-ஜன-202309:51:02 IST Report Abuse
G.Kirubakaran தாமரை, தேக்கு இலை பயன்படுத்தலாம் .இறைச்சி விட்பனை செய்ய
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
26-ஜன-202315:04:50 IST Report Abuse
.Dr.A.Joseph மூல வேராகிய உற்பத்தியை தடை செய்வதை விட்டு விட்டு பயன் படுத்துவோரிடம் அபராதம் போடுவது என்ன நியாயம்? உற்பத்தி செய்பவர்கள் பண முதலாளிகள் என்பதனாலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X