அஞ்சலக முத்திரையை தவறாக பயன்படுத்திய அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 6 பேருக்கு வலை
Added : ஜன 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ராணிப்பேட்டை:ஆற்காடில், அஞ்சலக அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய அ.தி.மு.க., நகர செயலர் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும், தற்காலிக தபால் ஊழியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசனிடம், 'டெண்டர்' தொடர்பான அஞ்சலக முத்திரையுடன் கூடிய கடிதத்தை, ஆற்காடு நகர அ.தி.மு.க., செயலர் சங்கர், 56, கடந்த, 20ல் கொடுத்தார்.

தபால் ஊழியர் கொடுக்க வேண்டிய கடிதத்தை, அ.தி.மு.க., நகர செயலர் சங்கர் கொடுத்ததால், சந்தேகமடைந்த பொறியாளர் கணேசன், ஆற்காடு தபால் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தியதில், ஆற்காடு தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், 50, பிச்சை, 51, ஆகியோர், சங்கரிடம், 2,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, அவர் கொடுத்த தபாலுக்கு பழைய தேதி அஞ்சல் முத்திரையிட்டு கொடுத்தது தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் பணிநீக்கம் செய்து, அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் உத்தரவிட்டார்.

இது குறித்து, ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசன், ஆற்காடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், நகராட்சியில் கால்வாய் பணிகளுக்கு பலர் டெண்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

டெண்டர் தேதி கடந்த, 18ல் முடிந்து விட்டது. இதனால், அ.தி.மு.க., நகர செயலர் சங்கர், தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், பிச்சை ஆகியோர் ஒத்துழைப்புடன், டெண்டர் கடிதத்தில் பழைய தேதியிட்ட அஞ்சலக முத்திரையிட்டு, பொறியாளர் கணேசனிடம் கொடுத்தது தெரிய வந்தது.

இதற்கு, ஆற்காடு அ.தி.மு.க., பிரமுகர்கள் சேதுமாதவன், 50, ராஜேந்திரன், 54, பிச்சாண்டி, 40, ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

சங்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் ஐந்து பிரிவுகளில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X