தூத்துக்குடி:பட்டா மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சுப்பையா 65. 2010 அக்டோபர் 11ல், தூத்துக்குடி கிப்ட்சன் புரத்தைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் 67, என்பவர் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கு சுப்பையா ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தூத்துக்குடி சி.ஜெ.எம்., நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சுப்பையாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார்.