2 years for bribed VAO | லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,விற்கு '2 ஆண்டு' | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,விற்கு '2 ஆண்டு'
Added : ஜன 26, 2023 | |
Advertisement
 

துாத்துக்குடி:பட்டா மாற்றத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு, இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், பேரூரணி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சுப்பையா, 65. இவரிடம், 2010 அக்., 11ல், துாத்துக்குடி, கிப்ட்சன் புரத்தைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன், 67, என்பவர் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு சுப்பையா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

துாத்துக்குடி நீதிமன்றத்தில், 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், சுப்பையாவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X