பதுக்கி வைக்கப்பட்டிருந்த 980. லி. சாராயம் பறிமுதல்: இருவர் கைது.
Added : ஜன 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 980 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
சோதனை சாவடிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பணியில் இருந்தும் பாண்டி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான விற்பனையை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசலில் குடியரசு தின விடுமுறையை பயன்படுத்தி விற்பனை செய்வதற்காக பாண்டி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து திருமுல்லைவாசலுக்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் பிரபல சாராய வியாபாரியான திருமலைவாசல் காமராஜ் நகர் மாறன் மனைவி லட்சுமி.49. என்பவர் வீட்டில் சோதனை செய்ய நடத்தினர். சோதனையின் போது காம்பவுண்ட் சுவர் அருகே 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 25 கேம்களில் 805 லிட்டர் மற்றும் 35 மூட்டைகளில் 1750 பாக்கெட்டுகளின் நிரப்பப்பட்ட 175 லிட்டர் என மொத்தம் 980 லிட்டர் பாண்டி சாராயம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட பாண்டி சாராயத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து சாராயத்தை கைப்பற்றி செய்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் பிரபல சாராய வியாபாரி லட்சுமி மற்றும் அவரிடம் சாராய வியாபாரம் செய்த பாரதி.42. இருவரையும் பிடித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சாராயத்தை கைப்பற்றி, வியாபாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X