திண்டிவனம்-திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்.
திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் குடியிரசு தின விழா நடந்தது. சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். நேர்முக உதவியாளர் கணேஷ், தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். தொடர்ந்து சப் கலெக்டர் தாலுகா அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார்.
பின், திண்டிவனம் கிளைச் சிறைக்கு சென்று, அங்கிருந்த பதிவேடுகளை தணிக்கை செய்தார். சிறையிலிருந்த 13 கைதிகளிடம், குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என, அறிவுரை கூறினார். திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன், தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றார்.