அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 50 சவரன் கொள்ளை விபத்தில் சிக்கிய கொள்ளையர்கள் கைது
Added : ஜன 27, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு, 50 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், விபத்தில் சிக்கியதால் போலீசில் சிக்கினர்.

திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் அருகே ஜான்சிராணி நகரில் வசிப்பவர் ராமசாமி, 44; அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி வனிதா; திருநெல்வேலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

நேற்று முன்தினம் இரவு கண்டக்டர், மகன், மகளுடன் வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், அவர்களை தாக்கி கட்டிப் போட்டனர்.

பீரோவில் இருந்த, 50 சவரன் நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அப்போது, வேலை முடிந்து வனிதா வீட்டுக்கு வந்ததால், கொள்ளையர்கள் பின்வாசல் வழியாக தப்பினர்.

இரண்டு, 'பைக்'குகளில், ஐந்து பேர் வந்தது தெரியவந்தது. கணவர், மகன், மகள் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வனிதா, அவர்களது கட்டுகளை அவிழ்த்து விட்டார்.

பைக்குகளில் தப்பிய கொள்ளையர்கள், நள்ளிரவில் துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை பாலத்தில் சென்ற போது, விபத்துக்கு உள்ளாகி படுகாயம்அடைந்தனர்.

இதில், இருவர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீஸ் விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள், துாத்துக்குடி, கோரம்பள்ளம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்து, 22, சிலுவை, 25 என, தெரியவந்தது.

ராமசாமி வீட்டில் கொள்ளையடித்தது இவர்கள் தான் எனவும் தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன.

இவர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட துாத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்த கண்ணன், 20, கிஷோர் டேனியல், 20 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளைக்கு திட்டம் தீட்டிய நாகர்கோவில் சம்சுதீனை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X