சங்கராபுரம்-சங்கராபுரம் அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்தார்.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது 16 வயது மகள் பிளஸ் 1 படித்தார். இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
அதேப் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பச்சையாப்பிள்ளை என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தந்தை முருகன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.