A leopard fell into a well and died | கிணற்றில் விழுந்த சிறுத்தை பலி | நீலகிரி செய்திகள் | Dinamalar
கிணற்றில் விழுந்த சிறுத்தை பலி
Added : ஜன 27, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
A leopard fell into a well and died  கிணற்றில் விழுந்த சிறுத்தை பலி

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா, கல்கடவு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது வீட்டின் முன்பாக 28 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

நேற்று இரவு இப்பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது கவுன்சிலர் முரளி இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் அய்யனார், வனவர் பிலிக்ஸ் தலைமையிலான வனக்குழுவினர் ஏணி மூலம் சிறுத்தையை மீட்க முயற்சி மேற்க்கொண்டனர். ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால், மூச்சு திணறி சிறுத்தை உயிரிழந்தது. தொடர்ந்து தீயாணைப்பு துறையினர் சிறுத்தையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X