ஈரோடு: ''இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தி.மு.க.,வினரே நினைக்கின்றனர்,'' என, ஓட்டுச்சாவடி முகவர்களிடம் பழனிசாமி பேசினார்.
ஆனால், கடந்தாண்டு பொங்கலின்போது தரமற்ற பொங்கல் பொருட்களை வழங்கி, மக்களை ஏமாற்றினார். இந்தாண்டு பொங்கல் தொகுப்பு பொருட்களை நிறுத்தவிட்டு, 1,000 ரூபாய் மட்டும் வழங்கியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் மின் கட் டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவை, சாதாரண மக்களை எவ்வாறு பாதித் துள்ளது என்பதை கூறி ஓட்டு சேகரியுங்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டாண்டு ஆகவுள்ள நிலையிலும், ஈரோடு தொகுதியில் ஒரு துரும்பு அளவுக்கு கூட திட் டத்தை நிறைவேற்றவில்லை.
அவர் களை பொறுத்தவரை கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என்பது தான் இந்த ஆட்சி. எனவே, இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும், என தி.மு.க.,வினரே நினைக்கின்றனர். இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று, இடைத்தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து, வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.