கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியை, ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை இடித்து அகற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே, அவதானப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதில், நகராட்சிக்குட்பட்ட இடத்தையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தெரிந்தது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, சம்பந்தப்பட்ட மாணிக்கத்துக்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும் அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, கடையின் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து அகற்ற உத்தரவிட்டார். இதுகுறித்து கடை உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, 11:00 மணியளவில் நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில், நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேலும் சேலம் கோட்டம் செய்திகள் :
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more
I agree
X