Youth Welfare Minister Udayanidhi participates in the launch of Rs.400 crore welfare scheme | ரூ.400 கோடி நலத்திட்ட பணி துவக்கம் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ரூ.400 கோடி நலத்திட்ட பணி துவக்கம் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
Added : ஜன 28, 2023 | |
Advertisement
 

நாமக்கல்: தமிழக அரசின் நிறைவுற்ற திட்டங்கள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொற்கிழி வழங்கும் விழா இன்று, நாமக்கல்லில் நடக்கிறது.
அதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். காலை, 9:00 மணிக்கு, நாமக்கல்-சேலம் சாலை, பொம்மக்குட்டைமேட்டில் நடக்கும் அரசு விழாவில், 400 கோடி ரூபாய் மதிப்பில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, 300 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு துறைகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து, 11:50 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிறார். அதையடுத்து, மதியம், 1:00 மணிக்கு, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, துவக்கி வைக்கிறார். 2:00 மணிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், தலைவர் கருணாநிதி குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
மாலை, 4:30 மணிக்கு, திருச்செங்கோடு செல்லும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ப.வேலுார் சாலை, வாலரை கேட் ரவுண்டானா அருகில், 60 அடி உயர கம்பத்தில், கட்சிக் கொடி ஏற்றுகிறார்.
தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு, கரட்டுப்பாளையத்தில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சிக்கு உழைத்த, 1,000 முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவை, மாவட்ட நிர்வாகமும், கட்சி நிகழ்ச்சியை, கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X