ராமநாதபுரம்,-ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே டி பிளாக்கிலுள்ள ஸ்ரீமங்களவிநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து மஹா கணபதி ேஹாமம் நடந்தது. இதில் 14 கும்பங்களுக்கு யாகசாலையில் யாக பூஜை செய்யப்பட்டு கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஸ்ரீமங்கள விநாயகர், நாகநாதர், நவக்கிரகங்களுக்கு பூரண கும்ப அபிேஷகம் நடந்தது.
விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. கோயில் குருக்கள்கள் கோபாலகிருஷ்ண ஐயர், ராஜாராம் ஐயர், ரவி ஐயர் மற்றும் விழா கமிட்டியாளர்கள் வருஷாபிசேக ஏற்பாடுகளை செய்தனர்.