படியில் தொங்கிய மாணவர் காயம்டிரைவர் மீது வெறி தாக்குதல்
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்விழுந்து படுகாயம் அடைந்ததால் கிராம மக்கள் டிரைவர் பாலமுருகனை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை 4ம் நம்பர்டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலை, மாலை முத்துபேட்டை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

நேற்று முன்தினம் மாலை டிரைவர் பாலமுருகன் பெரியபட்டணத்தில் இருந்து ராமநாதபுரம் அரண்மனைக்கு பஸ்சை ஒட்டி வந்தார். முன்புறம், பின்புறம் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் தொங்கியவாறு பயணித்தனர்.

வாலாந்தரவை வளைவில் திரும்பிய போது பின்புற படிக்கட்டில் நின்ற மதன் 18, என்ற கல்லூரி மாணவர் சாலையோர கம்பத்தில் இடித்து கீழே விழுந்தார். பின்னால் டூவீலரில் வந்த அவரது நண்பர்கள் காயமடைந்தவரை ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வாலாந்தரவை கிராமத்தினர் சிலர் டிரைவர் பாலமுருகனை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்டக்டர் வேல்முருகன் புகாரில்கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

டிரைவர் பாலமுருகன் கூறுகையில், மாணவர்களிடம் எத்தனை முறை கூறினாலும் கேட்காமல் படிக்கட்டில் தான் தொங்கி வருகின்றனர். உள்ளே வரச்சொன்னாலும் கேட்பதில்லை. பொதுமக்களின் பயணமும் தடைபடக் கூடாது. ஒவ்வொரு நாளும் பிரச்னையுடன் தான் பணி செய்ய வேண்டியுள்ளது, என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X