சி.எம்.டி.ஏ., அலுவலர் வருவதேயில்லை பி.டி.ஓ., அலுவலகத்தில் 'பைல்' தேக்கம்
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சி.எம்.டி.ஏ., 'அசிஸ்டன்ட் பிளானர்' இரண்டு ஆண்டுகளாக வராததால், அங்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து சி.எம்.டி.ஏ., அனுமதி பெறும் நிலை உள்ளது. இதனால் ஏராமான 'பைல்'கள் தேக்கம் அடைந்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் 21 ஊராட்சிகள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ., எல்லையில் உள்ளது.

குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள இந்த 21 ஊராட்சிகளில் லே--அவுட் மற்றும் கட்டடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது அவசியம்.

இதற்காக, படப்பையில் உள்ள குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சி.எம்.டி.ஏ., சார்பில் சுழற்சி முறையில் மாதத்திற்கு 'அசிஸ்டன்ட் பிளானர்' அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அலுவலர், திங்கள் முதல் வெள்ளி வரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து மக்களை சந்தித்து, சி.எம்.டி.ஏ., விண்ணப்ப மனுக்களையும், கட்டுமான இடத்தையும் சரிபார்த்து அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், இரண்டு ஆண்டுகளாக அசிஸ்டன்ட் பிளானர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வருவதே இல்லை. இதனால், சி.எம்.டி.ஏ.,வுக்கு விண்ணப்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சி.எம்.டி.ஏ.,விற்கு விண்ணபிக்க வரும் மக்களை சந்தித்து கட்டடத்திற்கு ஏற்ப 20 ஆயிரம் மூதல் 50 ஆயிரம் பணம் பெற்று சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்திற்கு சென்று அசிஸ்டன்ட் பிளானரை சந்தித்து லஞ்ச பணம் கொடுத்து சி.எம்.டி.ஏ., அனுமதியைப் பெற்று வருகின்றனர்.

இதனால், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்று தரும் இடைத்தரகர்கள் அதிகரித்துள்ளனர். பணம் உள்ளவர்கள் மட்டுமே சி.எம்.டி.ஏ., அனுமதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

சி.எம்.டி.ஏ., அனுமதி பெற முடியாததால் பலர் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

சி.எம்.டி.ஏ.,வுக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான மனுக்கள் நிலுவையில் உள்ளதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு செல்ல வேண்டிய வருவாய், உள்ளாட்சி துறைக்கு செல்ல வேண்டிய வருவாய், பத்திர பதிவுத் துறைக்கு செல்ல வேண்டிய வருவாய் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் சி.எம்.டி.ஏ., அசிஸ்டனட் பிளானர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வராததால் ஊழல் அதிகரித்துள்ளது.

எனவே, சி.எம்.டி.ஏ., அசிஸ்டன்ட் பிளானர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X