காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கோனேரிகுப்பம், வையாவூர் சாலை, ஒருங்கிணைந்த அறிஞர் அண்ணா நகர்- மூவேந்தர் நகரில், கற்பக விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோயின்றி வாழவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, விநாயகர், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை செய்தனர்.
பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.