Pongal gift money theft | பொங்கல் பரிசு பணம் திருட்டு | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
பொங்கல் பரிசு பணம் திருட்டு
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 



செங்கல்பட்டுசெங்கல்பட்டு, களத்து மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 37. ரேஷன் கடை விற்பனையாளர். இவர், திருப்போரூர், கரும்பாக்கம் அடுத்த, விரால்பாக்கம் பகுதி, ரேஷன் கடையில், வேலை செய்து வருகிறார்.

அங்கு பணியை முடித்துவிட்டு, நேற்று முன்தினம், செங்கல்பட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். அதன்பின், செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள டீக்கடைக்கு செல்வதற்கு, வாகனத்தின் மேல், பையை வைத்துவிட்டு சென்றார்.

அதன்பின், திரும்பி வந்து பார்த்தபோது, பை காணவில்லை. அதில். பொங்கல் பரிசுத் தொகை 27 ஆயிரம் ரூபாயும், கடையில் விற்பனை செய்த, 18 ஆயிரத்து 950 ரூபாயும், இரண்டு கைரேகை வைக்கும் 'மிஷின்'களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X