நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியர்களின் வங்கிக்கணக்கு முடக்கம்; அரசிடமே ஓய்வூதியத்தை சேர்க்க நடவடிக்கை
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News


மதுரை: மதுரை மாவட்ட ஓய்வூதியர்களில் சிலர் இன்னும் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்காததால் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஜூலையில் நடைபெறும் நேர்காணலில் (மஸ்டரிங்) தங்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அதை தொடர்ந்து அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.

கடந்தாண்டு ஜூலை முதல் செப்., வரை நேர்காணலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 99 சதவீதத்தினருக்கும் மேல் பங்கேற்றனர். தற்போது 150க்கும் மேற்பட்டோர் இன்னும் வராமல் உள்ளனர். இவர்கள் நேர்காணல் விவரம் அறியாதவர்கள், இறந்தோர், வெளிநாடுகளில் வசிப்போராக உள்ளனர்.

இவர்களின் வங்கிக் கணக்குகளை கருவூலத்துறை முடக்கியுள்ளது. இவர்களில் சிலர் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை வங்கிகளில் இருந்து எடுக்காமலும் உள்ளனர். இத்தகையோரின் ஓய்வூதிய தொகையை மீண்டும் அரசு கணக்கில் திரும்ப செலுத்தும் பணி நடக்கிறது.

மாவட்ட கருவூல அலுவலர் அண்ணாத்துரை கூறுகையில், ''பல ஆயிரம் கணக்குகளில் இன்னும் சொற்ப எண்ணிக்கையில் நேர்காணலுக்கு வராமல் உள்ளனர். அவர்களை கண்டறியும் பணி நடக்கிறது. தற்போது ஓய்வூதிய கணக்குகளை முடக்கி உள்ளதால் இதற்கு பின்பு மேலும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. அவர்களின் உண்மைத் தன்மை அறிந்து அரசு அனுமதியுடன் கணக்குகளை விடுவிப்போம்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X