பெண்ணின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



திட்டக்குடி : திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நஷ்டஈடு, அரசு வேலை வழங்கினால் மட்டுமே, உடலைப் பெறுவோம் என, சமாதானக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர்.

திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மனைவி மலர்க்கொடி, 48;கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், திட்டக்குடி பொன்னுசாமி நகரில் உள்ள வீட்டில் சித்தாளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மலர்க்கொடிக்கு, தங்கதுரை, 26; தினேஷ்,23, என இரண்டு மகன்கள் உள்ளனர்.

மலர்க்கொடி குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இல்லாவிட்டால் உடலை பெற மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்தனர். இதையடுத்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திக் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நகராட்சி, மின் வாரியம், வருவாய் ஆகிய துறைகளின் அதிகாரிகள், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். நஷ்டஈடு மற்றும் அரசு வேலை கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், சமாதானக் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அனைத்துக்கட்சி பிரமுகர்கள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X