கோவில்பட்டி: கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் கோவில்பட்டி கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் வைத்து இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் எனும் வார இதழ் ஜனவரி 29ம் தேதி 1780ம் ஆண்டு ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் வர்த்தக செய்திகள் இடம்பெற்றன. இந்த இதழில் போர்செய்திகள் இடம் பெற்றதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. நாடு முழுவதும் முதல் வார இதழ் வெளியான ஜனவரி 29ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்கள் வழங்கப்பட்டு வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட அமைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார். கொண்டயராஜு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி முன்னிலை வகித்தார்.பயிற்சி பள்ளி மாணவி மதுலக்க்ஷனா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தலைவர் முத்துச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தினசரி செய்தித்தாள்களை வழங்கி பேசினார். ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செய்திதாள்களை வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டனர். முடிவில் பயிற்சி பள்ளி மாணவி அன்னை பேச்சி நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.