பொள்ளாச்சி:தமிழ்நாடு வேளாண் பல்கலை வணிகமுறையில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, நாளை, 31, பிப்.,1 ஆகிய இரு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில், உலர வைக்கப்பட்ட காய்கறி, பழங்கள், பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழமிட்டாய் ஆகியவை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி நடக்கும்.
ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 94885 18268/ 0422 - 6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.