போக்குவரத்து காவல் நிலையம் கேளம்பாக்கத்தில் அமையுமா?
Added : ஜன 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



திருப்போரூர், : செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்த காவல் நிலையங்களையும் பிரித்து, சென்னைப் புறநகரான தாம்பரத்தில், புதிய காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு, அதில் இணைக்கப்பட்டன.

இந்த காவல் ஆணையரகத்தின் கீழ், பள்ளிக்கரணையில் இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இந்த இணை கமிஷனரின் கட்டுப்பாட்டில், கேளம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகம் வருகிறது.

கேளம்பாக்கம், கானத்துார், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும், விரைவில் தொடங்கப்பட உள்ள சிறுசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களும், இந்த கேளம்பாக்கம் உதவி கமிஷனரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

கானத்துார், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குள், வாகன விபத்து நடந்து வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ, பள்ளிக்கரணையில் செயல்படும் இணை ஆணையர் காவல் நிலையத்தில் தான் புகார் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது.

அங்கிருந்து போலீசார் வந்து, விபத்து நடந்தது எப்படி, விபத்திற்கு காரணம் யார் என்பது குறித்து ஆய்வு செய்து, புகைப்படங்களை எடுத்த பிறகே, வழக்கு பதிவு செய்து, வாகனம் சேதம் அடைந்ததற்கான சான்றிதழ் அல்லது உயிரிழப்புக்கான எப்.ஐ.ஆர்., போன்றவற்றை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, பொதுமக்களுக்கு வீண் அலைச்சலை உருவாக்குவதாக கருத்து எழுந்துள்ளது.

கானத்துார், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க, கேளம்பாக்கம் அல்லது நாவலுாரில், போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க, தாம்பரம் கமிஷனர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X