பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி தகவல்
Added : ஜன 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



புதுச்சேரி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில், 8 மண்டலங்களுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்கள், 298 மாணவியர் என, மொத்தம், 648 பேர் பங்கேற்றனர். போட்டிகள் 14, 17, 19 வயது என 3 பிரிவுகளில் நடந்தது.

குண்டு எறிதலில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் காரைக்கால் நிர்மலா ராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா 9.34 மீ., துாரமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி மாணவி லோகிதா 10.27 மீ., துாரமும் எறிந்து சாதனை படைத்தனர்.

19 வயதுக்குட்பட்ட பிரிவில் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா வட்டு எறிதலில் 26.39 மீ.,துாரம் எறிந்தும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் காரைக்கால் நிர்மலா ராணி பள்ளி மாணவி ஹரிபிரியா நீளம் தாண்டுதலில் 4.62 மீ., துாரம் தாண்டியும் சாதனை படைத்தனர்.

17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஒதியம்பட்டு செயின்ட் ஜோசப் குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி மதுமிதா 200 மீ., ஓட்டத்தை 26.25 வினாடிகளில் கடந்தும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ஆர்த்திகா ஈட்டி எறிதலில் 22.97 மீ., துாரம் எறிந்து சாதனை படைத்தனர்.

பரிசளிப்பு விழா கோரிமேடு காவல் துறை மைதானத்தில் நடந்தது. பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் முதல்வர் ரங்கசாமி போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசுகையில், 'மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என, விரும்புகிறார்களோ அதனை கொண்டு வருவது தான் புதுச்சேரி அரசின் எண்ணம். இதற்கான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தனியார் கல்லுாரிகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நன்றாக படித்தால் நல்ல சிந்தனைகள் வளரும். அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அரசு கொறடா ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X