அரசு வேலைக்கு பணம் வாங்கிய தகராறில் 3 பேர் கைது அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
Added : ஜன 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



விழுப்புரம், : அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய தகராறில் அ.தி.மு.க., கிளை செயலாளர் உள்ளிட்ட 4 பேரை தாக்கிய, அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த நல்லரசன்பேட்டையை சேர்ந்தவர் உதயசூரியன், 58; அ.தி.மு.க., கிளை செயலாளர்.

இவர் கோலியனுாரை சேர்ந்த வீரமுத்து என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை நல்லரசன்பேட்டையை சேர்ந்த கோலியனுார் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், 50; என்பவரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், 5 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி கொடுக்காததால், நேற்று முன்தினம் இரவு உதயசூரியன் பணத்தை திருப்பி கேட்டார்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் முருகன் மற்றும் அவரது உறவினர்கள் மணிகண்டன் என்கிற விக்னேஷ், 32; கலையரசன் என்கிற கலைவேந்தன், 32; ராஜி, 52; பிரபாகரன், 45; கார்த்தி, 38; ஆகியோர் சேர்ந்து உதயசூரியன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், 35; சரத்குமார், 29; மற்றும் அவரது உறவினர் அய்யனார், 44; ஆகியோரை கத்தி, தடியால் தாக்கியுள்ளனர்.

இதில் சதீஷ்குமார், சரத்குமார், அய்யனார் ஆகியோரின் தலையில் பலத்த காயமும், உதயசூரியனுக்கு வலது தோலில் காயமும் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த உதயசூரியன் மனைவி வசந்தா, மகள் இளவரசி, சதீஷ்குமார் மனைவி சரண்யா ஆகியோரையும் முருகன் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது வளவனுார் போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன், கலையரசன், ராஜியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X