பறவைகள் கணக்கெடுப்பு  15 ஆயிரம் பறவைகள் கண்டறிந்து பதிவு  
Added : ஜன 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 15 ஆயிரம் பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் நீர்பறவைகள் கணக்கெடுப்பு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூளாங்குறிச்சி மணிமுக்தா, கச்சிராயபாளையம் கோமுகி அணைகள் மற்றும் ஏரிகள் உட்பட 28 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒரே நேரத்தில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி வனசரக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் வன அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் என 5 குழுக்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் அதிகரிக்கும் பறவை இனங்கள் மற்றும் குறைந்து வரும் பறவை இனங்கள் என தனி தனியாக பதிவு செய்யப்பட்டன. இதில் தோசி கொக்கு, கூகை ஆந்தை, மாங்குயில் உள்ளிட்ட 15 வகையான அரியவகை பறவை இனங்கள் மற்றும் மத்திய ஆசியா, இமயமலை போன்ற பகுதிகளில் வாழும் பறவைகள் இனங்களும் கண்டறியப்பட்டது.

அதேபோல் அதிகளவில் சின்ன வெள்ளைகொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் நிற நாரை, புள்ளி மூக்கான் வாத்து, நாமக்கோழி போன்ற பறவை இனங்கள் காணப்பட்டது. மாவட்டத்தில் 94 பறவை இனங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பறவைகள் கணக்கெடுப்பில் இருந்தது தெரிந்தது.

அழிந்து வரும் பறவை இனங்களை வரும் காலங்களில் பாதுகாப்பதற்கு இந்த கணக்கெடுப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.



கள்ளக்குறிச்சியில்

யுரோஷியன் பறவை கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பளம் ஏரியில் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சிறிய யுரோஷியன் உரைநெக்(யுரேசிய மரங்கொத்தி) இருப்பது பதிவு செய்யப்பட்டது. பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, யுரோஷியன் உரைநெக், 17 செ.மீ.அளவு மட்டுமே இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பனி அதிகம் இருக்கும்போது, இந்தியா, ஈரான் துணை கண்டங்களில் இவை வலம் வருகின்றன. இவை கள்ளக்குறிச்சியில் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.




 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X