கந்துவட்டி கொடுமை தொடர்கிறது; கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
Added : ஜன 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருநெல்வேலி : கந்துவட்டி வாங்கி கொடுமை படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 74. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்தியவாணி. மகன் செல்வன் 24. திருக்குறுங்குடி அருகே நம்பித் தலைவன் பட்டயத்தைச் சேர்ந்த மலையப்பன் 40, என்பவரிடம் ஆறுமுகம் ரூ 20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதற்கு வாரம்தோறும் ரூ 2 ஆயிரம் வீதம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி கொடுத்துள்ளனர்.

5 மாதங்களாக வட்டி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற மலையப்பன் ஜன.,17ல் ஆறுமுகம் குடும்பத்தினர் வேலை பார்க்கும் ராதாபுரம் மகேந்திரபுரத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று ஆறுமுகம் மனைவியிடம் தகராறு செய்து ஜாதியை குறிப்பிட்டு அவதூறாக பேசியுள்ளார்.

மனமுடைந்த ஆறுமுகத்தின் மகன் செல்வன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் மலையப்பன் மீது பணகுடி போலீசார் கந்துவட்டி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.

அவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்ய செல்வன் புகார் செய்திருந்தார். அதன் பிறகும் ஆறுமுகம் குடும்பத்தினரை மலையப்பன், மிரட்டியுள்ளார். எனவே நேற்று ஆறுமுகம், சத்தியவாணி, செல்வம் ஆகியோர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கொண்டு வந்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி ஆறுமுகம் தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த போலீசார், தீயணைப்பு படையினர் அவரை மீட்டனர்.

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் 2017 அக்டோபரில் கந்துவட்டிக் கொடுமையால் கடையநல்லூரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தனர். கந்து வட்டி பிரச்னையில் வாரந்தோறும் தீக்குளிப்பு முயற்சிகள் நடக்கின்றன. போலீசாரின் கடுமையான நடவடிக்கையின்மையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை தொடர்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X