திரு.வி.க., நகர் சென்னை அயனாவரம் சிவலிங்கா ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் கண்ணையன், 62.
இவருக்கு அம்பத்துார் அடுத்த, சூரப்பட்டில் சொந்தமாக 4,800 சதுர அடி காலி மனை உள்ளது. இதன் மதிப்பு 2 கோடி என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், அம்பத்துார் சார்- - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் ஒருவர், தன்னை கன்னியப்பன் அறிமுகப் படுத்தி, இந்த இடத்தை விற்பதற்காக, சார் - பதிவாளரிடம் அடையாள அட்டைகளை சமர்ப்பித்துள்ளார். அது போலி என தெரிய வந்தது.
இது குறித்து அம்பத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த முதியவரை போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அம்பத்துார் விநாயகபுரம் இந்திரா நகரை சேர்ந்த தனபால், 72, என்பதும், இவர் கன்னியப்பன் போல அடையாள அட்டை தயார் செய்து, அவரது நிலத்தை மோசடியாக விற்க முயற்சித்தும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் தனபால் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.