நில மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி., மெத்தனம் பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
Added : ஜன 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு கிராமங்களில், வருவாய்த் துறை வாயிலாக நில எடுப்பு செய்யப்பட்டது.

இதில் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள பீமந்தாங்கல் கிராமத்தில் நில எடுப்பு செய்ததில், சர்வே எண். 310/1ல், 7.5 ஏக்கர் நிலம், போலியாக பட்டா பெற்று, அதன் மூலம், 33.09 கோடி ரூபாய் மோசடி செய்து, சிலர் இழப்பீடு பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் வெளியே வந்த பின், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் வாயிலாக இழப்பீடு பெற்றதாக ஆசிஷ்மேத்தா, செல்வம், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, போலி பட்டா பெற்று நிலம் வைத்திருந்த ஆசிஷ்மேத்தா, செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை ஏமாற்றி, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசுக்கு மாற்றி, தமிழக அரசு கடந்த 2021ல் உத்தரவிட்டது.

இந்த மோசடி நடைபெறுவதற்கு, பல்வேறு போலி ஆவணங்களை தயார் செய்ததாக, சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த சரவணன், பாஸ்கரன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக இருந்துள்ளனர் என தமிழக அரசு உத்தரவிலேயே தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சென்ற பின் வேகமெடுக்கும் எனவும், விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் மெத்தனப் போக்குடன் கையாள்வதாக புகார் எழுந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகளான நிலையில், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா இன்று வரை கைது செய்யப்படவில்லை.

போலீசாரால் தேடப்படும் நபராக இருக்கும்போதே, போலீசார் முன்பு நீதிமன்றத்துக்கு வந்து சென்றிருந்தார்.

முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா மீது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். போலீசார் அவரை விசாரிக்கக் கூட இல்லை என கூறப்படுகிறது.

அதேசமயம், 2021 ஜூலை மாதம் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் வழக்கின் குற்றப்பத்திரிக்கை இன்று வரை தாக்கல் செய்யவில்லை. காலம் தாழ்த்துவதால், இந்த வழக்கு நீர்த்துப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை, நில மோசடி வழக்கில் சிக்கிய பெண் அதிகாரி நர்மதா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-- நமது நிருபர் --

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X