Pongal special pooja at Tiruthani Kannikovil | திருத்தணி கன்னிக்கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
திருத்தணி கன்னிக்கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை
Added : ஜன 31, 2023 | |
Advertisement
 
Pongal special pooja at Tiruthani Kannikovil   திருத்தணி கன்னிக்கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை

திருத்தணி:திருத்தணி மலைக்கோவிலில் நடந்த தை கிருத்திகை விழாவில், அம்மையார்குப்பம், மத்துார், புச்சிரெட்டிப்பள்ளி, குருவராஜபேட்டை, மின்னல், வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை, ஆந்திர மாநிலம் சத்திரவாடா, ஏகாம்பரகுப்பம், சிந்தலப்பட்டடை, நாராயணவனம் உள்ளிட்ட 11 கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முருக பெருமானை தரிசித்தனர்.

பின், மலைக்கோவிலில் தங்கியிருந்து, நேற்று, காலை 6:00 மணிக்கு மேற்கண்ட கிராம மக்கள், திருத்தணி அருகே உள்ள கன்னிக்கோவிலுக்கு சென்றனர்.

பின், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தும், அசைவ உணவு வகைகள் தயாரித்து, குடும்பத்துடன் சிறப்பு பூஜை செய்து, சாப்பிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் மற்றும் உணவு தயாரிப்பதற்காக அங்குள்ள சுனை நீரை பயன்படுத்தினர்,

பின், நேற்று மாலையில் அவர்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

35 ஆண்டுகளாக மேற்கண்ட 11 கிராம மக்கள் தைகிருத்திகை மறுநாள் கன்னிக்கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X