ராமேஸ்வரம் கடலில் 43 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன
Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் நேற்று 43 லட்சம் இறால் குஞ்சுகளை மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விட்டனர். இதுவரை மொத்தம் 4.40 கோடி எண்ணிக்கையில் விடப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்கள் பாதுகாத்திடும் வகையில் மத்திய மீன்வள அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது. இத்திட்டத்தில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்றுமதிக்கு உகந்த பச்சை வரி இறால் குஞ்சுகள் வளர்த்து மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடலில் விடுகின்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் 43 லட்சம் இறால் குஞ்சுகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி தலைமையில் படகில் கொண்டு சென்று விட்டனர்.

இம்மீன் குஞ்சுகள் இரு மாதத்தில் 100 கிராம் எடையில் வளர்ந்ததும் மீனவர் வலையில் சிக்க வாய்ப்பு உள்ளது. இது ஏற்றுமதியாகும் என்பதால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

இதன் மூலம் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது குறையும். இத்திட்டம் 2020 பிப்ரவரியில் துவங்கியது முதல் இரு ஆண்டுகளில் மொத்தம் 4 கோடி 40 லட்சத்து 40 ஆயிரம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, மூத்த விஞ்ஞானி ஜான்சன் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
01-பிப்-202311:17:25 IST Report Abuse
N Annamalai சிறப்பான திட்டம் .இது குறித்து சிந்தித்த யோசித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X