ராமநாதபுரம்:புயல் எச்சரிக்கை காரணமாக வரும் 3 வரை, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45- - 65 கி.மீ., வரை வீசக்கூடும்; கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, தென் மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடலில் வரும் 3 வரை கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.