ராமேஸ்வரம்:கச்சத்தீவு சர்ச் திருவிழாவிற்கு படகில் செல்ல ஒருவருக்கு கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும், என ராமேஸ்வரம் பாதிரியார் தெரிவித்தார்.
பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 3, 4ல் நடக்கிறது.
இவ்விழாவில் தமிழகம், இலங்கையிலிருந்து 8000 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதித்து உள்ளது. மார்ச் 3ல் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகளில் செல்வோர் மறுநாள் திரும்புவர். இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் கச்சத்தீவு திருப்பணி குழு செய்கிறது.
ராமேஸ்வரம் பாதிரியார் தேவசகாயம் கூறுகையில், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க யாழ்ப்பாணம் முதன்மை குருக்கள் அழைப்பு விடுத்துள்ளார். விழாவில் 60 விசைப்படகுகள், சில நாட்டுப்படகில் 3000 பேர் செல்ல உள்ளனர். ஒருவருக்கு படகு கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும்.
ராமேஸ்வரம் சர்ச் வளாகத்தில் பிப்.2, 3ல் விண்ணப்பம் வழங்கப்படும். செல்ல விரும்புவோர் காவல் நிலையத்தில் நற்சான்றும், அரசு ஊழியர்கள் தடையில்லா சான்றும் வாங்கி விண்ணப்பத்துடன் இணைத்து அனைவரும் பிப்.10 க்குள் கொடுக்க வேண்டும்.
ஒரு படகில் படகோட்டிகள் உட்பட 40 பேர் செல்ல அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம், என்றார்.