ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி   மத்திய அரசு திட்டம்
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சிவகங்கை:தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ரேஷன் கடைகள்,குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மதிய உணவு திட்ட தேவைக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த அரிசியில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 அடங்கிய நுண்ணூட்ட

சத்து சேர்த்து வழங்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டிய அரிசியாக வினியோகம் செய்யப்படுகிறது.

செறிவூட்டிய அரிசியில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்கிறது.

போலிக் அமிலம் பெண்களின் கரு வளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. வைட்டமின் பி12 சத்து நரம்பு மண்டலத்தின் இயல்பான செயலுக்கு உதவுகிறது.



விருதுநகர் ராமநாதபுரத்தில் திட்டம்




இத்திட்டம் முதலில் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 2022 டிச., முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம், மதிய உணவு திட்டத்திற்கு இந்த அரிசி வழங்கப்படுகிறது.

2024 மார்ச்-சிற்குள் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது வினியோக திட்டம் மூலம் ரேஷன் கார்டுகள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், மதிய உணவு திட்டம், பிற நலத்திட்டங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X