தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சிவகங்கை:திருப்புவனத்தில் தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கைமாவட்டம் மணலுார் அருகே ஒத்தவீட்டை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மனைவி சீனியம்மாள் 56. இவர்களது மகன்கள் சரவணன் 45, முருகன் 42. 2018ல் சரவணனின் தம்பி முருகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். பெண் கேட்டு செல்லும் இடத்தில் எல்லாம், சரவணன் மனைவியை பிரிந்து வாழ்வது பற்றி கேட்டு முருகனுக்கு பெண் தர மறுத்துள்ளனர். இதில் அதிருப்தியான சரவணனின் தாய் சீனியம்மாள், மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ சரவணனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

2018 ஜூன் 18 மதியம் 3:00 மணிக்கு இது தொடர்பாக சீனியம்மாள், சரவணன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற சரவணன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து சீனியம்மாளின் தலையில் போட்டு கொலை செய்தார். திருப்புவனம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி சுமதி சாய் பிரியா, தாயை கொலை செய்த சரவணனுக்கு, ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X