அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் வட்டார வேளாண்துறை சார்பில் தெத்துாரில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த மாவட்ட பயிற்சி நடந்தது.
ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பண்ணைய முறைகள், முக்கியத்துவம், விவசாயம் மட்டுமின்றி கால்நடைகள், காளான், தேனீ வளர்ப்பு, மண்புழு, வீட்டுத் தோட்டம் அமைத்தல், வேளாண் செயலி குறித்து உதவி இயக்குனர் ராமசாமி, மத்திய திட்ட வேளாண் அலுவலர் செல்வராஜ் விளக்கினர்.
உதவி வேளாண் அலுவலர் ஈஸ்வரன், தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், உதவி மேலாளர்கள் சவுந்தர்ராஜன், வசந்தி பங்கேற்றனர்.