விபத்து சிகிச்சைக்கு ரூ.125.42 கோடி நிதி சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேச்சு
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



கோவை : ''இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48' என்ற திட்டத்தில் இதுவரை, 125.42 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது,'' என, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசினார்.



கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிப்பு மற்றும், 56 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில் அதிகளவு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 828 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்தாண்டு அதிகபட்சமாக, 565 கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு அடுத்து கோவையில் அதிகளவில் மருத்துவ வசதிகள் உள்ளன. தமிழக முதல்வர், 708 மருத்துவமனைகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் என, சட்டசபையில் தெரிவித்தார்.

அதில், தலா ஒரு டாக்டர், மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். கோவை மாநகராட்சியில் மட்டும், 64 மருத்துவமனைகள் உட்பட மாவட்டத்தில், 72 மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பிப்., இறுதிக்குள் இந்த, 708 மருத்துவமனைகளில், 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஒரே நேரத்தில் துவங்கி வைக்கப்பட உள்ளன. 'இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம், 48' திட்டத்தில், 2.76 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 679 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை, 125.42 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

மருத்துவமனை டீன் ரவீந்திரன், மாநில மருத்துவக் கல்லுாரி இயக்குனர் சாந்திமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X