தைப்பூச தேர்த்திருவிழா: 80 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



திருப்பூர் : தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவை, திருப்பூரில் இருந்து, 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.



திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோவிலின் தைப்பூசத் தேர்த்திருவிழா, கடந்த ஜன., 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்., 5ம் தேதி நடக்கிறது.

இதற்காக, பழநி செல்லும் பக்தர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 300க்கு மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வரும், 4ம் தேதி அதிகாலை முதல், 5ம் தேதி இரவு வரை இந்த சிறப்பு பஸ்கள் இயங்கும். அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தை பொறுத்தவரை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக, 30 பஸ்கள், திருப்பூரில் இருந்து, 50 பஸ்கள் என, மொத்தம், 80 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பயணிகள் கூட்ட நெரிசல் மற்றும் தேவைக்கேற்ப பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கூட்டம் இல்லை. நடப்பாண்டு கொரோனா இல்லை. இதனால், தைப்பூச நாளில் பழநியில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழநியை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X