நிலையான விலை கிடைக்க அரசு உதவணும்! கொண்டைக்கடலை விவசாயிகள் எதிர்பார்ப்பு
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



உடுமலை : 'அறுவடை காலத்தில், கொண்டைக்கடலை விலை சரிவை தடுக்க, நேரடி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

களிமண் விளைநிலங்களில், மட்டும் விளையும், இச்சாகுபடி பரப்பு பல்வேறு காரணங்களால், ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. குறிப்பாக, விதைப்பின் போது, அதிக விலைக்கு வாங்கப்படும் கொண்டைக்கடலைக்கு, அறுவடையின் போது, போதிய விலை கிடைப்பதில்லை.

மேலும், பருவ நிலை மாற்றங்களால், செடியின் வளர்ச்சித்தருணத்தில், பனிப்பொழிவு இருப்பதில்லை; விதைப்பும் குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. தற்போது, கணபதிபாளையம் சுற்றுப்பகுதிகளில், செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

விவசாயிகள் கூறியதாவது:

கொண்டைக்கடலையில், நல்ல விளைச்சல் கிடைக்க, பருவமழைக்கு பிறகு குறித்த நேரத்தில், பனிப்பொழிவு துவங்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, பருவநிலை மாற்றங்களால், போதிய விளைச்சல் கிடைக்கவில்லை.

விதைப்பு, சராசரியாக நான்கு மருந்து தெளித்தல், தொழிலாளர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. இந்தாண்டு, கிலோ 65 ரூபாய்க்கு, கொண்டைக்கடலை விதைப்பு செய்தோம்.

ஏக்கருக்கு, 600 கிலோ முதல் 900 கிலோ வரை, விளைச்சல் கிடைக்கும். சுண்டல் மற்றும் கடலை மாவு தயாரிப்புக்கு, இக்கடலை பயன்படுகிறது.

இந்நிலையில், இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், போதிய விலை கிடைப்பதில்லை. இந்தாண்டு, நிலையான விலை கிடைக்க, தமிழக அரசு உதவ வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து கொண்டைக்கடலையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, புரதச்சத்துகள் மிகுந்த கொண்டைக்கடலையை அரசு வழங்கலாம்.

சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு, கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரியாமல், இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

கொண்டைக்கடலை செடிகளை பனி ஈரப்பதம் நிலவும் போதே அறுவடை செய்ய வேண்டும். பகல் நேரங்களில், செடிகளை பிடுங்கினால், காய்கள் உதிர்ந்து விடும்.

எனவே, அறுவடைக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதிலும் விவசாயிகளுக்கு சிக்கல் நீடிக்கிறது. நேரடி அறுவடைக்கான இயந்திரங்களும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X