சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக, 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக, நாளை முதல், வரும் 11ம் தேதி வரை, மொத்தம் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எங்கெங்கு மாற்றம்
ஆற்காடு சாலையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள், சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்ல தடை விதிக்கப்படுகிறது.
சைதாப்பேட்டை சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், துரைசாமி சாலை, சன்னிதி சாலை மற்றும் 2வது அவென்யூ வழியாக, இலக்கை அடையலாம்.
துரைசாமி சாலையில் இருந்து, சன்னிதி தெரு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
சன்னிதி தெருவில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி, செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
சைதாப்பேட்டை சாலையில் இருந்து, முத்தாலம்மன் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள், இந்த புதிய போக்கு வரத்து மாற்றங்களால், தடை செய்யப்படுகிறது.
100 அடி சர்வீஸ் சாலையில் இருந்து, முத்தாலம்மன் சாலை சென்று, சைதாப்பேட்டை சாலை வழியாக இலக்கை அடையலாம்.
இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.