புலி தாக்கி பெண் பலி மக்கள் ஆவேச மறியல்
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

கூடலுார்:முதுமலை தெப்பக்காடு அருகே, பழங்குடியின பெண்ணை கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைபாடியைச் சேர்ந்த பெண் மாரி, 65. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றார்; நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.

நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில், அவரை புலி தாக்கி கொன்றிருப்பது தெரிந்தது.

மசினகுடி போலீசார், சடலத்தை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனை எடுத்து சென்றனர். 'புலியை உடனே பிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, பழங்குடி மக்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், தமிழகம் - கேரளா - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது; பயணியர் சிரமத்துக்கு ஆளாகினர்.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண், கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி., செல்வராஜ் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இறந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில், 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. வன ஊழியர்கள், அப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தி, புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X